என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசுக்கு எதிராக சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
Byமாலை மலர்29 March 2018 8:54 AM GMT (Updated: 29 March 2018 8:54 AM GMT)
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #CauveryManagementBoard
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு இன்றுடன் முடிகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால், தமிழக அரசு சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது அவர் சந்திக்கவில்லை. எனவே, மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. #CauveryManagementBoard
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு இன்றுடன் முடிகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால், தமிழக அரசு சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது அவர் சந்திக்கவில்லை. எனவே, மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. #CauveryManagementBoard
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X