என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பிணி ஆக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகா மேலப்பொன்னி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி பாண்டி. இவரது மகள் சித்ரா (வயது 24). இவரும், திருவாடானை பகுதியைச் சேர்ந்த உறவினர் ஸ்டீபன் என்பவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்தனர். ஸ்டீபன் திருமணம் செய்வதாக கூறி சித்ராவுடன் நெருங்கி பழகி வந்தார். இதில் சித்ரா கர்ப்பிணி ஆனார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்டீபனிடம் பலமுறை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சித்ரா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






