என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் நண்பர் நகையுடன் நள்ளிரவில் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்24 Feb 2018 10:02 AM GMT (Updated: 24 Feb 2018 10:02 AM GMT)
சென்னையில் பேஸ்புக் நட்பால் பெண்ணுடன் பழகிய ஒருவர் நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை:
பேஸ்புக் இணையதளமானது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை நட்பால் இணைத்து வருகிறது. இதன்மூலம் ஒருவருக்கொருவர் நட்பால் பழகிக் கொள்கிறார்கள்.
சென்னையில் பேஸ்புக் நட்பால் பெண்ணுடன் பழகிய ஒருவர் நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் மனோஜ் குமார் (வயது 22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். இவர் பேஸ்புக் மூலம் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த நித்யா என்ற பெண்ணுடன் நட்புடன் இருந்தார்.
மனோஜ் குமார் மீது நித்யாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் கடந்த 9-ந்தேதி தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்தார். நள்ளிரவில் நித்யாவின் நகையுடன் மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா காலையில் கணவரிடம் நள்ளிரவில் வெளியே இயற்கை உபாதை களிக்க சென்றபோது ஒருவன் நகையை பறித்துச் சென்று விட்டதாக கூறினார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் நித்யாமீது சந்தேகம் அடைந்து அவரது செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் முதல்நாள் இரவு நித்யா வேறொரு எண்ணுடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அந்த எண் மனோஜ்குமாருடையது என்றும் அவருடன் நித்யா பேஸ்புக்கில் நட்பில் இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நித்யா தனது பேஸ்புக் நண்பரை வீட்டுக்கு அழைத்ததையும், நள்ளிரவில் அவர் நகையுடன் மாயமானதையும் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செங்குன்றம் போலீசார் பழனிக்கு விரைந்து சென்று மனோஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். நகையை திருடிய பின்பு பேஸ்புக் இணைப்பை துண்டித்துக் கொண்டார். போலீசார் அவர்மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
பேஸ்புக் இணையதளமானது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை நட்பால் இணைத்து வருகிறது. இதன்மூலம் ஒருவருக்கொருவர் நட்பால் பழகிக் கொள்கிறார்கள்.
சென்னையில் பேஸ்புக் நட்பால் பெண்ணுடன் பழகிய ஒருவர் நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் மனோஜ் குமார் (வயது 22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். இவர் பேஸ்புக் மூலம் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த நித்யா என்ற பெண்ணுடன் நட்புடன் இருந்தார்.
மனோஜ் குமார் மீது நித்யாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் கடந்த 9-ந்தேதி தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்தார். நள்ளிரவில் நித்யாவின் நகையுடன் மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா காலையில் கணவரிடம் நள்ளிரவில் வெளியே இயற்கை உபாதை களிக்க சென்றபோது ஒருவன் நகையை பறித்துச் சென்று விட்டதாக கூறினார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் நித்யாமீது சந்தேகம் அடைந்து அவரது செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் முதல்நாள் இரவு நித்யா வேறொரு எண்ணுடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அந்த எண் மனோஜ்குமாருடையது என்றும் அவருடன் நித்யா பேஸ்புக்கில் நட்பில் இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நித்யா தனது பேஸ்புக் நண்பரை வீட்டுக்கு அழைத்ததையும், நள்ளிரவில் அவர் நகையுடன் மாயமானதையும் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செங்குன்றம் போலீசார் பழனிக்கு விரைந்து சென்று மனோஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். நகையை திருடிய பின்பு பேஸ்புக் இணைப்பை துண்டித்துக் கொண்டார். போலீசார் அவர்மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X