என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    தேவகோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    தேவகோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் அருகே உள்ள பகந்தன்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தா. இவர் நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் சாந்தாவிடம் ஒரு துண்டு சீட்டை காண்பித்து முகவரி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் திடீரென்று சாந்தா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகிறார். கொள்ளையர்கள் காரில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×