search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
    X

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், ஹால் டிக்கெட் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் தேர்வுகளை நடத்துகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் 21 லட்சம் பேர் இம்முறை விண்ணப்பித்திருந்தனர்.

    அதேபோல, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் கணிசமான செலவுத்தொகை தேர்வாணையத்திற்கு மிச்சமாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை தேர்வாணைய தளத்தில் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை உட்செலுத்தி அனுமதிச்சீட்டை பெறலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×