என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி பிரச்சினை: தமிழக எம்.பி.க்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டும் - ஜி.கே.வாசன்
Byமாலை மலர்29 Jan 2018 2:40 AM GMT (Updated: 29 Jan 2018 2:40 AM GMT)
காவிரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தமிழக எம்.பி.க்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்பதை பற்றியும் விவாதிக்கும் கூட்டமாக அமையவேண்டும். காவிரி பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் கடன் பிரச்சினை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் கூட்டதொடராக இது இருக்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். மக்களுக்கு பயன்அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கவேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் இணைந்து குரல் கொடுத்து காவிரி பிரச்சினை மற்றும் மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்பதை பற்றியும் விவாதிக்கும் கூட்டமாக அமையவேண்டும். காவிரி பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் கடன் பிரச்சினை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் கூட்டதொடராக இது இருக்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். மக்களுக்கு பயன்அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கவேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் இணைந்து குரல் கொடுத்து காவிரி பிரச்சினை மற்றும் மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X