என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு தெற்குகாருகுடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அரும்புஅம்மாள் (வயது75). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அரும்புஅம்மாள் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் அரும்புஅம்மாள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் மணல்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் அரும்புஅம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரும்பு அம்மாள்அணிந்திருந்த 4 பவுன் நகையை கொள்ளையடிக்க கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.






