என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை, நாகை, திருவாரூரில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை
    X

    தஞ்சை, நாகை, திருவாரூரில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை

    திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மதுக்கடையை மூடி வைக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மூடி வைக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் தினம் (15-ந்தேதி), குடியரசு தினம் (26-ந்தேதி), வள்ளலார் நினைவு தினம்(31-ந்தேதி) ஆகிய நாட்களில் தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகள் படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதியின்கீழ் தஞ்சை, நாகை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி மதுபானம் விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×