என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    நாகூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    நாகூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகூர் புதுதெருவைச் சேர்ந்தவர் அபுசாலி (வயது 60). இவர் நாகூர் தர்காவில் பக்தர்களுக்கு மந்திரித்து தாயத்து கட்டுவார். அபுசாலி இன்று காலை நாகூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×