என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஸ்ரீபெரும்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஸ்ரீபெரும்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801021521149594_ATM-machine-try-to-robbery-in-sriperumbudur_SECVPF.gif)
X
ஸ்ரீபெரும்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
By
மாலை மலர்2 Jan 2018 9:51 AM GMT (Updated: 2 Jan 2018 9:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஸ்ரீபெரும்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தேரடி சாலையில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.
இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர்கள் சென்ற போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.
அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும், பின்னர் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த கொள்ளை முயற்சியில் மேலும் பலர் கூட்டாக செயல்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான வாலிபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் தேரடி சாலையில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.
இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர்கள் சென்ற போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.
அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும், பின்னர் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த கொள்ளை முயற்சியில் மேலும் பலர் கூட்டாக செயல்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான வாலிபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)