என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
    X

    வேதாரண்யம் அருகே மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

    வேதாரண்யம் அருகே மரத்தில் இருந்து விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (57). விவசாயி. இவர் கடந்த மாதம் 29-ந்தேதி அருகில் உள்ள மரத்தில் ஏறி கால்நடைகளுக்கு தழை பறித்தபோது தவறி விழுந்து விட்டார். இவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால சுப்பிரமணியன் இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் முனியப்பன் (24) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் நடராஜன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×