search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் பட்டை, நாமம் அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    செந்துறையில் பட்டை, நாமம் அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    செந்துறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் பட்டை, நாமம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட குழு கோவிந்தசாமி  தலைமையில், சத்துணவு மற்றும் அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். அடுத்த வருடம் (2018 முதல்) பொங்கள் போனஸ் 500 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம்,

    அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப நலந்தி, ஈமக்கிரியை செலவு நிதி, இலவச பஸ்பாஸ், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பட்டை மற்றும் நாமம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×