search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
    • தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா தொடக்க உரையாற்றினார்.

    ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத் தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்டத் தலைவர் துரை, மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை மாநிலத் தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மீது துறைரீதியான விசாரணைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.

    மாநில மற்றும் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தினை சீரான இடைவெளியில் நடத்தி தீர்வு காண வேண்டும்.

    சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளைநிலை பொறியாளர்களுக்கும், உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ×