என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்"
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா தொடக்க உரையாற்றினார்.
ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத் தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்டத் தலைவர் துரை, மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை மாநிலத் தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மீது துறைரீதியான விசாரணைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.
மாநில மற்றும் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தினை சீரான இடைவெளியில் நடத்தி தீர்வு காண வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளைநிலை பொறியாளர்களுக்கும், உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்