என் மலர்
செய்திகள்

தா.பழூர் அருகே கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு: 6 வாலிபர்கள் கைது
கல்லூரி மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 6 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
தஞ்சை மாவட்டம் தாராசுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மகன் தினேஷ்(20). இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சுவாதியுடன் படிப்பு சம்மந்தமான ப்ராஜக்ட் தயாரிப்பதற்காக தா.பழூர் அருகில் உள்ள கோட்டியால் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரைக்குறிச்சி கப்பிரோடு அருகே செல்லும்போது அவ்வழியே இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் இருவரையும் வழிமறித்து அவர்களிமிருந்த செல்போன்களை பறித்துக் கொண்டு இருவரையும் தாக்கி விட்டு சென்றனர்.
இது குறித்து தா.பழுர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(26), ராஜ்மோன்(19), காரைக்குறிச்சியை சேர்ந்த ராஜா(23), வெங்கடேஷ் (24), மிக்கேல்பட்டியை சேர்ந்த ஜார்ஜ்(23), பேட்டிலாஸ்(25) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் தாராசுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மகன் தினேஷ்(20). இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சுவாதியுடன் படிப்பு சம்மந்தமான ப்ராஜக்ட் தயாரிப்பதற்காக தா.பழூர் அருகில் உள்ள கோட்டியால் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரைக்குறிச்சி கப்பிரோடு அருகே செல்லும்போது அவ்வழியே இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் இருவரையும் வழிமறித்து அவர்களிமிருந்த செல்போன்களை பறித்துக் கொண்டு இருவரையும் தாக்கி விட்டு சென்றனர்.
இது குறித்து தா.பழுர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(26), ராஜ்மோன்(19), காரைக்குறிச்சியை சேர்ந்த ராஜா(23), வெங்கடேஷ் (24), மிக்கேல்பட்டியை சேர்ந்த ஜார்ஜ்(23), பேட்டிலாஸ்(25) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






