என் மலர்
செய்திகள்

சர்க்கரை விலை உயர்வு: ரேசன் கடை முன்பு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம்
சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி ரூ.13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியது. இதை கண்டித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி ரூ.13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியது. இதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள ரேசன்கடை முன்பு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது ரேசன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், பொதுகுழு உறுப்பினர் குறிஞ்சிபாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் காசி ராஜன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், வி.ஆர்.அறக்கட்டளை உரிமையாளர் விஜயசுந்தரம், மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள ரேசன்கடை எதிரில் மாநில தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலை வகித்தார். ரேசன் கடையில் சர்க்கரை விலையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டன.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், தொ.மு.ச. தலைவலல் பழனிவேல், நிர்வாகிகள் பெரியசாமி, ஜெயசீலன்,மணிகண்டன் உட்பட தி.மு.க., காங்கிரஸ் கட்சினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 363 ரேசன்கடைகள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழைய ஜெயில் தெருவில் உள்ள 2 ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர துணை செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.
இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிங்காரவேல், வள்ளலார் குடில் டாக்டர் இளையராஜா, வக்கீல் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வக்கீல் மணிகண்டராஜன், கர்ணன், வெங்கடேசன், சரவணன், வட்டசெயலாளர் பாலு, பாண்டியன், ரவி, மதியழகன், குமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் சாவடிகுப்பத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், வக்கீல் அருள்குமார், நகர இளைஞரணி பொன்.கணேஷ், ஆனந்த், சுந்தரமூர்த்தி, மதிவாணன், ராஜேஷ், பன்னீர், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உள்ள ரேசன்கடை முன்பு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் தங்கஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வடலூர் பஸ்நிலையம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி ரூ.13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியது. இதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள ரேசன்கடை முன்பு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது ரேசன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், பொதுகுழு உறுப்பினர் குறிஞ்சிபாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் காசி ராஜன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், வி.ஆர்.அறக்கட்டளை உரிமையாளர் விஜயசுந்தரம், மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள ரேசன்கடை எதிரில் மாநில தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலை வகித்தார். ரேசன் கடையில் சர்க்கரை விலையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டன.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், தொ.மு.ச. தலைவலல் பழனிவேல், நிர்வாகிகள் பெரியசாமி, ஜெயசீலன்,மணிகண்டன் உட்பட தி.மு.க., காங்கிரஸ் கட்சினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 363 ரேசன்கடைகள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழைய ஜெயில் தெருவில் உள்ள 2 ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர துணை செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.
இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிங்காரவேல், வள்ளலார் குடில் டாக்டர் இளையராஜா, வக்கீல் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வக்கீல் மணிகண்டராஜன், கர்ணன், வெங்கடேசன், சரவணன், வட்டசெயலாளர் பாலு, பாண்டியன், ரவி, மதியழகன், குமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் சாவடிகுப்பத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், வக்கீல் அருள்குமார், நகர இளைஞரணி பொன்.கணேஷ், ஆனந்த், சுந்தரமூர்த்தி, மதிவாணன், ராஜேஷ், பன்னீர், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உள்ள ரேசன்கடை முன்பு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் தங்கஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வடலூர் பஸ்நிலையம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story






