என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி
வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் மகள் அஞ்சம்மாள் (வயது 46). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்டதே இதுபோன்ற உயிர்பலிக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






