என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் சினேகா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறன் என்று கருணாகரன் ஆசை வார்த்தை கூறி சினோகாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சிவாஜிக்கு தெரிய வந்தது.
அப்போது சினோகா நடந்த விவரத்தை தந்தையிடம் கூறி அழுதார். உடனே அவர் கருணாகரனை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு கருணாகரன் மறுத்து விட்டார்.
இதுகுறித்து சிவாஜி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கருணாகரனை கைது செய்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் சினேகா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறன் என்று கருணாகரன் ஆசை வார்த்தை கூறி சினோகாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சிவாஜிக்கு தெரிய வந்தது.
அப்போது சினோகா நடந்த விவரத்தை தந்தையிடம் கூறி அழுதார். உடனே அவர் கருணாகரனை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு கருணாகரன் மறுத்து விட்டார்.
இதுகுறித்து சிவாஜி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கருணாகரனை கைது செய்தார்.
Next Story






