என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே விபத்தில் கொத்தனார் பலி
திருவையாறு:
திருவையாறு அருகே கல்யாணபுரம் லிங்கத்தடியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது32). கொத்தனார். இவர் நேற்று மாலை 4.30 மணியளவில் சேட்டு என்பவரது ஆட்டோவில் தனது நண்பர்கள் 2 பேருடன் தஞ்சைக்கு சென்றார்.
மணக்கரம்பை மில் அருகில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர்களது ஆட்டோவின் மீது மோதியது. இதில் குணசேகரன், ஆட்டோ டிரைவர் சேட்டு உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த குணசேகரனுக்கு நித்யா என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்