என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயநல்லூர் அருகே டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை
Byமாலை மலர்30 Sep 2017 10:47 AM GMT (Updated: 30 Sep 2017 10:47 AM GMT)
வாடிப்பட்டி அருகே டீக் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டி:
மதுரையை அடுத்த சமயநல்லூர் அருகே உள்ள பரவை முத்துமுனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆங்கன் (வயது54). இவர் பரவை பவர்ஹவுஸ் எதிரே டீக்கடை நடத்தி வந்தார்.
வழக்கம்போல் நேற்றும் கடையை திறந்தார். நேற்று ஆயுத பூஜை என்பதால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது.
இரவு 7.15 மணி அளவில் சிலர் கடைக்கு டீ குடிக்க வந்தனர். கடைக்குள் ஆங்கன் ரத்த வெள்ளத் தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சமய நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து ஆங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆங்கனை வெட்டி கொன்றவர்கள் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.
இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X