என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி: பொதுமக்கள் பார்வையிட்டனர்
    X

    காரைக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி: பொதுமக்கள் பார்வையிட்டனர்

    காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப் படங்கள் இடம் பெற்றன.

    மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது,யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக புகைப்படக் கண்காட்சி உதவியாக இருந்தது என பொதுமக்கள் பாராட்டினர்.

    இப்புகைப்படக் கண் காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×