என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயக்கழிவுடன் வெள்ளப்பெருக்கு: நொய்யல் ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    சாயக்கழிவுடன் வெள்ளப்பெருக்கு: நொய்யல் ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    சாயப்பட்டறை கழிவு நீருடன் வெள்ளப்பெருக்கு கலந்து வருவதால், நொய்யல் ஆற்றுப்படுகை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
    சென்னிமலை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மத்திய மற்றும் உள் மாவடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கன மழைக்கு திருப்பூர் சாயப்பட்டறை சாய கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் குறுக்கே சென்னிமலை அருகே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    அணைக்கு ஒரே நாளில் 16 அடி நீர் வந்துள்ளது. காலை அணைக்கு வரும் நீரின் அளவு 485 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 320 கன அடி. தற்போது அணையில் உள்ள நீர் வெளியேற அடி மதகு திறந்தே விட்டுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 90 கன அடி மட்டும் நீர் வரத்து இருந்தது. அணையில் 2.87 அடி நீர் இருந்தது. நேற்று அதிகாலை நிலவரம் படி நீர் வரத்து திடீரென உயர தொடங்கி தற்போது 15.748 அடி நீர் தேங்கியுள்ளது. நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நொய்யல் ஆற்று படுகையில் வெள்ளியங்கிரி மழைசாரல் கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயகழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்ற படுவதால் ஒரத்துப்பாளையம் அணை எப்போதும் திறந்து தான் இருக்கும். தற்போது மழை வெள்ள நீர் வரத்து வந்து இருந்தாலும் இதை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்கே சாய கழிவு நீர் கலந்தவருமோ? என அச்சம் காரணமாகவும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படியும் அணைக்கு வரும் நீர் அடி நான்கு மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நல்ல மழை வெள்ள நீர் 16 அடி வந்தும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இருந்தாலும் தற்போது நிலவிய கடும் வறட்சியில் இந்த சாய கழிவு நீர் தான் பல ஆயிரம் தென்னை மரங்களை கரம் ஓரம் காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்ளதக்கது.

    நொய்யல் ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சாய நீர் மட்டும் சென்ற நொய்யல் ஆறு துர்நாற்றம் வீசி கொண்டு இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆறு சுத்தமாகி வருகிறது. கரையோர மக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகிறார்கள்.

    நொய்யல் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நொய்யல் கரையோரம் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×