என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் படுகாயம்
Byமாலை மலர்31 Aug 2017 3:56 PM GMT (Updated: 31 Aug 2017 3:56 PM GMT)
மாமல்லபுரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மாமல்லபுரம்:
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற் கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று சென்னையை நோக்கி அதிவேகத்தில் வந்தது.
பூஞ்சேரி என்ற இடத்தில் 2 பஸ்களும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பஸ் இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 2 பஸ்களில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற் கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று சென்னையை நோக்கி அதிவேகத்தில் வந்தது.
பூஞ்சேரி என்ற இடத்தில் 2 பஸ்களும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பஸ் இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 2 பஸ்களில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X