என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    நாகை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

    நாகை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 42). கடந்த 20 வருடங்களாக கஸ்தூரி கணவரை பிரிந்து சென்னையில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கஸ்தூரி நாகை மாவட்டம் முல்லையாம் பட்டினம் நெப்பத்தூர் பகுதியில் உள்ள அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

    இங்கு சில நாட்கள் தங்கி விட்டு பின்னர் சென்னை திரும்புவதாக கூறிவிட்டு சென்றவர், நெப்பதூர் அருகே உள்ள வயல் பகுதியில் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து திருவங்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் மேலத்தெரு அந்தனப்பேட்டையை சேர்ந்தவர் பாலசுந்தர் (34). இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நாகை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×