என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையநல்லூர் அருகே பனை மரத்தில் கார் மோதல்: டிரைவர் பலி
    X

    கடையநல்லூர் அருகே பனை மரத்தில் கார் மோதல்: டிரைவர் பலி

    கடையநல்லூர் அருகே கார் நிலை தடுமாறி சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடையநல்லூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு 11மணிக்கு ஒரு காரில் குற்றாலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோர பனை மரத்தில் மோதியது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜாபர் சாதிக் (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரிலிருந்த கமாலுதீன் (37),சேக் அலாவுதீன் (37), முகம்மது இமாமுத்தீன் (41),மஹ்புப்பாஷா (40)ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைகாக 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×