என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்ததி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்ததி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.ஐ. ஒன்றிய செயலர் அரசப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் துவக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பாசன ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் .கந்தர்வக் கோட்டை நகரில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை எரியவிட வேண்டும்,பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் செங்கோடன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பிகாபதி, நாகராஜன், அம்பலராஜ், பெருமாள், தங்கையன், கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×