என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டில் தனியார் நிறுவன ஊழியருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    செங்கல்பட்டில் தனியார் நிறுவன ஊழியருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    செங்கல்பட்டில் தனியார் நிறுவன ஊழியருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அழகேசன் நகரை சேர்ந்தவர் ஜெகன் மோகன் (வயது 58). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1 வாரத்துக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு டவுன் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுகாதார நலத்துறை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடந்தது.

    இதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×