என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத் துறை பெட்ரோல் பங்க் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது மகன் சாகுல்ஹமீது (வயது 55) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ. 100-ம் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story