என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலையூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    சேலையூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    சேலையூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலு, டெய்லர். இவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 21). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ஹேமச்சந்திரன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஹேமச்சந்திரன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    கல்லூரியில் பேராசிரியர் என்னை குறிவைத்து பழிவாங்கி விட்டார். என்னால் படிக்க முடியவில்லை.

    இதற்கு மேலும் அம்மா உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நண்பர்களை பிரிவது கடினமாக உள்ளது. என்னுடைய முடிவுக்கு பேராசிரியர் காரணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×