search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் சிகரெட் பற்ற வைத்தபோது விபரீதம்: வாலிபர் உடல் கருகி பலி
    X

    பரமக்குடியில் சிகரெட் பற்ற வைத்தபோது விபரீதம்: வாலிபர் உடல் கருகி பலி

    போதையில் இருந்த வாலிபர் சிகரெட் பற்ற வைத்தபோது தீ வேட்டியில் விழுந்து உடல் முழுவதும் பரவியது. இதில் அவர் உடல் கருகி பலியானார்.
    ராமநாதபுரம்:

    பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது40). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், சம்பவத்தன்று அதிகளவு மது குடித்தார்.

    போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்த இவர், சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது தீக்குச்சி தவறி வேட்டியில் விழுந்தது. இதில் பற்றிய தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×