என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி காய்கறி வியாபாரி பலி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கொல்ல கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் காய்கறி மொத்த வியாபாரி.
நேற்று இரவு இவர் காரிமங்கலத்தில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி அதனை மினிலாரியில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு, பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இரவு 8 மணி அளவில் கெரகோடஹள்ளி என்ற இடத்தின் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென சரவணன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்