என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளசரவாக்கத்தில் தொழில் அதிபர் காரில் கடத்தல்: 7 பேர் கும்பல் கைது
Byமாலை மலர்1 July 2017 9:51 AM GMT (Updated: 1 July 2017 9:51 AM GMT)
வளசரவாக்கத்தில் தொழில் அதிபர் காரில் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
நாகர்கோவிலை சேர்ந்தவர் ரெஜி. இவரது நண்பர் கேரளாவை சேர்ந்த ராஜன். இருவரும் தொழில் அதிபர்கள். இவர்கள் தொழில் சம்பந்தமாக சென்னை வந்திருந்தனர்.
வளசரவாக்கம் முத்து லட்சுமி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தனர். நேற்று இரவு இருவரும் லாட்ஜு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த 7 பேர் கும்பல் ரெஜி, ராஜனை காரில் கடத்த முயன்றனர். இதில் ராஜன் தப்பி ஓடிவிட்டார். ரெஜியை அக்கும்பல் காரில் கடத்தி சென்றது.
இது குறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
இதில் ரெஜியை கடத்திச் சென்ற காரை அம்பத்தூரில் மடக்கி பிடித்து 7 பேர் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் பண விவகாரத்தில் ரெஜியை கடத்தியது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X