என் மலர்

    செய்திகள்

    வளசரவாக்கத்தில் தொழில் அதிபர் காரில் கடத்தல்: 7 பேர் கும்பல் கைது
    X

    வளசரவாக்கத்தில் தொழில் அதிபர் காரில் கடத்தல்: 7 பேர் கும்பல் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வளசரவாக்கத்தில் தொழில் அதிபர் காரில் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    நாகர்கோவிலை சேர்ந்தவர் ரெஜி. இவரது நண்பர் கேரளாவை சேர்ந்த ராஜன். இருவரும் தொழில் அதிபர்கள். இவர்கள் தொழில் சம்பந்தமாக சென்னை வந்திருந்தனர்.

    வளசரவாக்கம் முத்து லட்சுமி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தனர். நேற்று இரவு இருவரும் லாட்ஜு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது காரில் வந்த 7 பேர் கும்பல் ரெஜி, ராஜனை காரில் கடத்த முயன்றனர். இதில் ராஜன் தப்பி ஓடிவிட்டார். ரெஜியை அக்கும்பல் காரில் கடத்தி சென்றது.

    இது குறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

    இதில் ரெஜியை கடத்திச் சென்ற காரை அம்பத்தூரில் மடக்கி பிடித்து 7 பேர் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் பண விவகாரத்தில் ரெஜியை கடத்தியது தெரிய வந்தது.

    Next Story
    ×