என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தான் அருகே ஸ்டவ் வெடித்து புதுப்பெண் உடல் கருகி பலி
Byமாலை மலர்1 July 2017 9:41 AM GMT (Updated: 1 July 2017 9:41 AM GMT)
சோழவந்தான் அருகே ஸ்டவ் வெடித்து உடல் கருகிய புதுப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள தாமோதரன்பட்டியை சேர்ந்தவர் சந்துரு (வயது21). இவரது மனைவி அருணா தேவி (18). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று சந்துரு வேலைக்கு சென்றுவிட வீட்டில் இருந்த அருணா தேவி சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சேலையில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடல்முழுவதும் பரவியது. வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருணாதேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X