என் மலர்
செய்திகள்

செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
செந்துறை அருகே 8 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் ஊர் மற்றும் காலணி மக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்
இதனை கண்டித்து கடந்த மாதமே பொன்பரப்பி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வட்டாட்சியர் அமுதா குடிநீர் பிரச்சினை யினை உடனடியாக சரிசெய்து தருவாதாக ஒப்புதல் அளித்து மறியலை கைவிட செய்தனர்.
ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி குடிநீர் இதுநாள் வரை வழங்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொன்பரப்பி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அரு கிலும், மற்றொரு காலணி தெரு மக்கள் குடியிருப்புகளின் அருகாமையிலுள்ள சாலைகளில் காலிக்குடங்களுடன் 2 சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் செந்துறை காவல் துணை ஆய்வாளர் சாமிதுரை மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் பொன்பரப்பி கிராம பொதுமக்கள் ஏற்கனவே நீங்கள் அளித்த உத்திரவாதத்தினை நம்பி நாங்கள் காத்திருந்தோம் ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால், எழுத்து பூர்வமாக உத்திரவாதம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தினை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உறுதிபட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததால் சாலை மறியலை பொன்பரப்பி பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்த சாலை மறியலால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் ஊர் மற்றும் காலணி மக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்
இதனை கண்டித்து கடந்த மாதமே பொன்பரப்பி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வட்டாட்சியர் அமுதா குடிநீர் பிரச்சினை யினை உடனடியாக சரிசெய்து தருவாதாக ஒப்புதல் அளித்து மறியலை கைவிட செய்தனர்.
ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி குடிநீர் இதுநாள் வரை வழங்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொன்பரப்பி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அரு கிலும், மற்றொரு காலணி தெரு மக்கள் குடியிருப்புகளின் அருகாமையிலுள்ள சாலைகளில் காலிக்குடங்களுடன் 2 சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் செந்துறை காவல் துணை ஆய்வாளர் சாமிதுரை மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் பொன்பரப்பி கிராம பொதுமக்கள் ஏற்கனவே நீங்கள் அளித்த உத்திரவாதத்தினை நம்பி நாங்கள் காத்திருந்தோம் ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால், எழுத்து பூர்வமாக உத்திரவாதம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தினை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உறுதிபட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததால் சாலை மறியலை பொன்பரப்பி பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்த சாலை மறியலால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






