என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலத்தில் வியாபாரி முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ. 70 ஆயிரம் பணம் பறிப்பு
சத்தியமங்கலத்தில் வியாபாரி முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வீரபத்ரா தெருவை சேர்ந்தவர் செல்வ குமார். இவர் அத்தாணி சாலையில் மளிகைக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டினார். கடையில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அவரது வீடு கடையின் அருகில் 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே கடையில் இருந்து வீட்டுக்கு செல்வகுமார் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
வீட்டுக்கு ஒரு சந்து வழியாக செல்ல வேண்டும். இரவு 10.45 மணிக்கு அந்த இடத்தை செல்வகுமார் நெருங்கி சென்று கொண்டிருக்கும்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர்.
2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி செல்வகுமாரின் முன்னால் சென்றனர். ஒரு மர்ம நபர் கீழே இறங்கி செல்வகுமாரின் பின்னால் சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் செல்வகுமாரின் பின்னால் சென்ற அந்த நபர் ‘அண்ணே...’ என்று அழைத்தார். சத்தம் கேட்டு செல்வகுமார் திரும்பி பார்த்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் செல்வகுமாரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் கண் எரிச்சலால் கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வகுமார் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்தனர்.
பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இந்த துணிகர பணம் பறிப்பு சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ரூ. 70 ஆயிரம் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் வீரபத்ரா தெருவை சேர்ந்தவர் செல்வ குமார். இவர் அத்தாணி சாலையில் மளிகைக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டினார். கடையில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அவரது வீடு கடையின் அருகில் 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே கடையில் இருந்து வீட்டுக்கு செல்வகுமார் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
வீட்டுக்கு ஒரு சந்து வழியாக செல்ல வேண்டும். இரவு 10.45 மணிக்கு அந்த இடத்தை செல்வகுமார் நெருங்கி சென்று கொண்டிருக்கும்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர்.
2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி செல்வகுமாரின் முன்னால் சென்றனர். ஒரு மர்ம நபர் கீழே இறங்கி செல்வகுமாரின் பின்னால் சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் செல்வகுமாரின் பின்னால் சென்ற அந்த நபர் ‘அண்ணே...’ என்று அழைத்தார். சத்தம் கேட்டு செல்வகுமார் திரும்பி பார்த்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் செல்வகுமாரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் கண் எரிச்சலால் கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வகுமார் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்தனர்.
பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இந்த துணிகர பணம் பறிப்பு சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ரூ. 70 ஆயிரம் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






