என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் கொ.ம.தே.க. நடத்தும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஈரோட்டில் வருகிற 6-ந்தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நடத்தும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஈரோடு:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை பராமரிக்கவும், தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தியும் கொ.ம.தே.க சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவரிடம் நீர்மேலாண்மை திட்டத்தை எடுத்துக்கூறி சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கை வைப்போம்.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கேரள மாநிலத்திற்கு செல்லும் பவானி ஆற்று தண்ணீர் நிறுத்தப்படும். இதேபோல் நீலகிரி பகுதியில் உதயமாகும் பல்வேறு கிளை நதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்துக்கு திருப்பி விட்டால் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை அவரை பற்றி பேசுவதே நேரம் வீண் என்று நினைக்கிறேன். இதனால் அவரை பற்றி கேட்க வேண்டாம். மாநிலத்தில் ஆளும் தமிழக அரசு முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய தைரியம் ஆளும் கட்சிக்கு இல்லை.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை பராமரிக்கவும், தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தியும் கொ.ம.தே.க சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவரிடம் நீர்மேலாண்மை திட்டத்தை எடுத்துக்கூறி சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கை வைப்போம்.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கேரள மாநிலத்திற்கு செல்லும் பவானி ஆற்று தண்ணீர் நிறுத்தப்படும். இதேபோல் நீலகிரி பகுதியில் உதயமாகும் பல்வேறு கிளை நதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்துக்கு திருப்பி விட்டால் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை அவரை பற்றி பேசுவதே நேரம் வீண் என்று நினைக்கிறேன். இதனால் அவரை பற்றி கேட்க வேண்டாம். மாநிலத்தில் ஆளும் தமிழக அரசு முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய தைரியம் ஆளும் கட்சிக்கு இல்லை.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
Next Story






