என் மலர்

    செய்திகள்

    சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது ரூ.7 கோடி மோசடி புகார்: நீலாங்கரை வீடு முற்றுகை
    X

    சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது ரூ.7 கோடி மோசடி புகார்: நீலாங்கரை வீடு முற்றுகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது ரூ.7 கோடி மோசடி புகார் கூறப்பட்டது. இந்நிலையில் 500-க்கு மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டை முற்றுகையிட்டனர்.
    திருவான்மியூர்:

    சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன். நடிகரான இவர் ‘தலைவன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

    இவர் தனது பெயரில் ரசிகர் மன்றம் வைத்துள்ளார். மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள், நிர்வாகிகளிடம் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும், தனது படம் வெற்றி பெற்றால் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீலாங்கரை போலீசில் புகார் கூறியுள்ளனர்.

    பாஸ்கரன் சொன்னபடி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை என்றும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரூ.7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

    இன்று அவரது ரசிகர் மன்ற தலைவர் பூவை அசோகன், சந்திர மோகன் தலைமையில் 500-க்கு மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து பாஸ்கரன் பெயரிலான ரசிகர்மன்றத்தை கலைத்து விட்டனர்.
    Next Story
    ×