என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் 3 இளம்பெண்கள் மாயம்
காரைக்குடி:
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் மோனிஷா (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற மோனிஷா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
காரைக்குடி இடையர் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (22). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியில்லை.
இதே போல் காரைக்குடி முத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவரின் மகள் முத்து கார்த்திகா (19). வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களை தேடி வருகிறார்.






