என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே தடுப்பு சுவற்றில் கார் மோதி வங்கி ஊழியர் பலி
    X

    அரியலூர் அருகே தடுப்பு சுவற்றில் கார் மோதி வங்கி ஊழியர் பலி

    அரியலூர் அருகே கார் சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதியதில் சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது43). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு தனது காரில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். காரை நடராஜன் ஓட்டிவந்துள்ளார்.

    அரியலூர் அருகே வாரணவாசி மருதையாற்று பாலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பலத்த காயமடைந்த நடராஜன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த அவரது 5 வயது மகன் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×