என் மலர்
செய்திகள்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ.40 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு
பண்ருட்டி அருகே ஆட்டோவில் தவறவிட்ட ரூ.40 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டி கவுரவித்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் பண்ருட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டைக்கு சென்றார். அப்போது இவரது ஆட்டோவில் தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவர் பயணம் செய்தார்.
புதுப்பேட்டையில் இறங்கி நதியா வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பண்ருட்டி வந்த ஆட்டோ டிரைவர் மோகன் ஆட்டோவில் ஒரு பை அனாதையாக கிடைந்ததை பார்த்தார். அதை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை ஆட்டோ டிரைவர் மோகன் பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.
பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தினார். அதில் ஆட்டோவில் பயணம் செய்த தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவரது பணம் என தெரியவந்தது. உடனடியாக பணத்திற்கு உரியவரான நதியாவிடம் ரூ.40 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி வழங்கினார். நேர்மையாக நடந்துகொண்டு பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி பாராட்டி கவுரவித்தார்.
பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் பண்ருட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டைக்கு சென்றார். அப்போது இவரது ஆட்டோவில் தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவர் பயணம் செய்தார்.
புதுப்பேட்டையில் இறங்கி நதியா வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பண்ருட்டி வந்த ஆட்டோ டிரைவர் மோகன் ஆட்டோவில் ஒரு பை அனாதையாக கிடைந்ததை பார்த்தார். அதை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை ஆட்டோ டிரைவர் மோகன் பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.
பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தினார். அதில் ஆட்டோவில் பயணம் செய்த தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவரது பணம் என தெரியவந்தது. உடனடியாக பணத்திற்கு உரியவரான நதியாவிடம் ரூ.40 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி வழங்கினார். நேர்மையாக நடந்துகொண்டு பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி பாராட்டி கவுரவித்தார்.
Next Story






