search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல்வி பயம்: 10-வது வகுப்பு மாணவி தற்கொலை
    X

    தோல்வி பயம்: 10-வது வகுப்பு மாணவி தற்கொலை

    தோல்வி பயத்தில் 10-வது வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவான்மியூர:

    மேடவாக்கத்தைச் சேர்ந்த ரகுவின் மகள் அன்புக்கரசி (18). இவள் 10-வது வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தாள். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டுக்கு சென்று இருந்தாள். அப்போது இருவரும் தேர்வு எழுதியது குறித்து விவாதித்தனர்.

    அப்போது தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என கூறி அன்புக்கரசி அழுதாள். அவளை தோழி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். அவர்கள் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்தனர். அப்போது தலைக்கு மேல் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து அன்புக்கரசி தற்கொலை செய்ததாக தெரிகிறது. பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×