என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

சென்னையில் இருந்து டெல்லிக்கு 342 பயணிகள் செல்லும் மிகப்பெரிய விமானம்: ஏர்-இந்தியா முடிவு

ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக 168 பயணிகள் செல்லும் வகையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முக்கிய நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் அதிகளவில் பயணிகள் வந்து சென்றனர்.
இதையடுத்து பயணிகளின் வசதிக்காக பெரிய விமானத்தை இயக்க ஏர்- இந்தியா நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 342 பேர் பயணம் செய்யும் வகையில் போயிங்-777 ரக விமானத்தை இயக்குகிறது.
இந்த விமானம் காலை 8.30 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறது. மீண்டும் அதே விமானம் 9.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறது.
இதுபோல் இரவு 8.30க்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மீண்டும் 9.30 மணிக்கு டெல்லிக்கு செல்கிறது.
ஒரே நேரத்தில் அதிகளவு பயணிகள் செல்ல முடிவதால் ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு விமான பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
