என் மலர்
செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் எலக்ட்ரீசியன் பழனிமுருகன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றியபோது கடைக்கு மேலே சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.
தாம்பரம்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 32). இவர் குரோம்பேட்டை ராதாநகரில் தங்கியிருந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்துள்ளார்.
குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.
அப்போது நிஜாமுதீன் என்பவருக்கு சொந்தமான கடையையும் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முன் வந்தனர். அப்போது நிஜாமுதீன் தானே ஆட்களை வைத்து ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி விடுவதாக தெரிவித்தார்.
அதன்படி எலக்ட்ரீசியன் பழனிமுருகன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிக் கொண்டிருந்தார். கூரையின் மீது நின்று ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது கடைக்கு மேலே சென்ற மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் பழனிமுருகன் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுமாப்பிள்ளையான பழனி முருகனுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. அவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 32). இவர் குரோம்பேட்டை ராதாநகரில் தங்கியிருந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்துள்ளார்.
குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.
அப்போது நிஜாமுதீன் என்பவருக்கு சொந்தமான கடையையும் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முன் வந்தனர். அப்போது நிஜாமுதீன் தானே ஆட்களை வைத்து ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி விடுவதாக தெரிவித்தார்.
அதன்படி எலக்ட்ரீசியன் பழனிமுருகன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிக் கொண்டிருந்தார். கூரையின் மீது நின்று ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது கடைக்கு மேலே சென்ற மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் பழனிமுருகன் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுமாப்பிள்ளையான பழனி முருகனுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. அவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.
Next Story






