search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 2-ந்தேதி அமைச்சர் உதயநிதி கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு-செயற்குழு கூட்டத்தில் முடிவு
    X

    கோவையில் 2-ந்தேதி அமைச்சர் உதயநிதி கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு-செயற்குழு கூட்டத்தில் முடிவு

    • உதயநிதி பிறந்தநாளையொட்டி மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
    • செயற்குழு கூட்டத்துக்கு அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்

    கோவை, நவ.

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்த லைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் சிறப்புரை யாற்றினார். இதில் வருகிற டிசம்பர் 2-ந் தேதி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இளைஞர்கள் அணி கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    எனவே இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதுவரை இல்லாத அளவில் கூட்டத்தை நடத்த வேண்டும். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், தள பதி இளங்கோ, மு.மா.முருகன், நா.பாபு, நோயல் செல்வம், கோவை லோகு, இளைஞர் அணி அமைப்பாளர் தனபால் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×