என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
    X

    கோவையில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது

    • 500 கிலோ தக்காளி கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தக்காளி ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது,

    கோவை,

    அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி தான். அனைத்து சமையல்களிலுமே தக்காளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் தக்காளியின் விலை விண்ணை முட்டு அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.150யையும் தாண்டி விற்பனையாகி வந்தது.

    நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரிப்பதால் தற்போது, சமையலில் தக்காளியின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது.

    பெரும்பாலானவர்கள் தக்காளி இல்லாமலேயே சமைக்க தொடங்கி விட்டனர். பெரும்பாலான ஓட்டல்களிலும் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டன.

    கோவையை பொறுத்த வரை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது. சில்லரை விலை கடைகளிலும் இதை விட விலை அதிகமாக உள்ளது.

    காய்கறி மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட உழவர் சந்தைகளில் நாட்டு தக்காளி ரூ.80க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் அந்த கடைகளில் தக்காளி விற்பனையானது நடைபெற்றது. அந்த கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    மக்களும் ரேஷன்கடைகளில் ஆர்வத்துடன் குவிந்து தக்காளியை வாங்கி சென்றனர். தக்காளியை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். இதுகுறித்து கூட்டுற வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தக்காளி விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கும் வசதியாக கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி கோவையில் ஒலம்பஸ், ஒண்டிப்புதூர், சாய்பாபா காலனி, கே.கே.புதூர், குனியமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், பி.என்புதூர், இடையர்பாளையம், கணபதி, கவுண்டம்பா ளையம், செல்வபுரம், வெள்ளக்கிணறு உள்பட 20 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வரை 500 கிலோ தக்காளி கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் சென்று தக்காளி வாங்கி பயன் அடையலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கோவையில் தக்காளி விற்பனை செய்யப்படும் ரேஷன் கடைகள் விபரம்:

    முத்துராமலிங்கம் வீதி 2 ராமநாதபுரம், 80 அடி சாலை ஓலம்பஸ், மாரி யம்மன் கோவில் வீதி ஓண்டிப்புதூர், திருச்சி சாலை ஓண்டிப்புதூர், என்.எஸ்.ஆர்.சாலை, சாய்பாபா காலனி, கே.கே.புதூர் சாய்பாபா காலனி, குனியமுத்தூரில் 2 கடை, பாரதி நகர் பெரியநாயக்கன் பாளையம், இளங்கோவ டிகள் வீதி பி.என்.புதூர், மாரியம்மன் கோவில் வீதி பி.என்.புதூர், ஜெயாநகர் நீலிக்கோணாம்பாளையம், அனயன்காடு எஸ்.ஆர்.டி.லே அவுட் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி எதிரில், தேவாங்க நகர் இடையர்பா ளையம், கே.ஆர்.ஜி.நகர் கணபதி, மூவர் நகர் கவுண்டம்பாளையம், முத்துசாமி காலனி செல்வபுரம், வெள்ளக்கி ணறு, கே.கே.புதூர் கோவில் மேடு கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×