search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கோவையில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

    • கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது வரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் சவுரிபாளையத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23),உடையாம் பாளையத்தை சேர்ந்த பிரதீப் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 50 போதை மாத்தி ரைகளை போலீசார் பறி முதல் செய்தனர்.பின்னர் 2 பேரையும் கோர் ட்டில் ஆஜர்படுத்தி ஜெயி லில் அடைத் தனர். தப்பி ஓடிய பீளமேடு புதூரை சேர் ந்த நித் தீஷ் என்ப வரை தேடி வருகி றார்கள்.

    Next Story
    ×