search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 ேபர் கைது
    X

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 ேபர் கைது

    • கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார்.
    • அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்களூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 26). இவர், கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார். அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சடையன்பாளையத்தை சேர்ந்த ராஜா (27) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

    இருவரும் சேர்ந்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனால் இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×