search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி
    X

    கோவையில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி

    • சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வைரமணி (வயது 36). இவர்கள் மோகன் என்பவரது தோட்டத்தில் 15 ஆண்டுகளாக தங்கி இருந்து விவசாய தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவரை அவரது கணவர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). இவர் பீளமேடு அருகே உள்ள வீரியம்பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று மழை பெய்து கொண்டு இருந்தது. ஸ்ரீகாந்த் அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அவர் மின் கம்பத்தை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×