என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விபத்தில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
    X

    கோவையில் விபத்தில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

    • சம்பவத்தன்று அண்ணாதுரை திருச்சி-கோவை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருச்சி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). இவர் காரணம்பேட்டையில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் திருச்சி-கோவை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மதுக்கரையை சேர்ந்தவர் செந்தில் (52). இவர் சம்பவத்தன்று சேலம்-பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நடந்து சென்ற செந்தில் மீது மோதியது.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×