search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு சீட்டுகள் திருடிய 2 பேர் கைது
    X

    திருட்டு வழக்கில் கைதானவர்கள்.

    இரும்பு சீட்டுகள் திருடிய 2 பேர் கைது

    • இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.
    • போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த கதிராமங்கலம் பகுதியில் நெடுஞ்சா லைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் கட்டும் பணியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.

    இதனை பார்த்த பணியின் மேற்பார்வை யாளர் அவர்களை பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பாகசாலை ஆலவெளி பகுதியை சேர்ந்த செல்வக்கு மார் (வயது 21), மயிலாடுதுறை காளிங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்த சக்தி கவுதம்

    (22 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×