என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
- ஆறுமுககனி தான் வளர்த்து வரும் ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
- மதன், அருள்முத்து மணி ஆகியோர் ஆட்டை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுககனி (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று இவர் வளர்த்து வரும் ஆட்டை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். சிறிது நேரத்தி ற்கு பின் சென்று பார்த்த போது ஆட்டை காணவில்லை. ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்த அன்பழகன் மகன் மதன் (19), பெருமாள் மகன் அருள்முத்து மணி (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






